சிவன் (கேதார) மற்றும் சக்தியை (கெளரி) வணங்கி அனுஸ்டிக்கப்படும் விரதமான கேதார கெளரி விரதத்தின் இறுதி நாளை முன்னிட்டு இன்று வல்வை சிவன் கோவிலில் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.
கேதார கெளரி விரதம்
இந்துக்கள் அனுஷ்டிக்கும் விரதங்களுள் பெரும்பாலானவர்கள் அனுஷ்டிக்கும் விரதங்களுள் கேதார கெளரி விதரம் ஒன்று ஆகும். இந்த விரதம் பெயரளவில் கேதார கெளரி விரதம் என்றழைக்கப்பட்டாலும் செயல் வடிவில் முழுக்க முழுக்க சிவ விரதமாகவே போற்றப்படுகின்றது.
கேதார கெளரியம்பாள், கேதாரநாதரை வேண்டி, ஈஸ்வரனின் இடப்பாகத்தை சொந்தமாக்கிக் கொள்ள இருபத்தொரு நாள் தவமிருந்து தனது எண்ணத்தை நிறைவேற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த வகையில் மிக நீண்ட அதிக நாட்கள் கடைப்பிடிக்கப்படும் சில விரதங்களுள் இதுவே முதன்மையானது அமைகின்றது.
கேதார கெளரி விரதம் புரட்டாதி மாத வளர்பிறை விஜயதசமி திதியில் ஆரம்பித்து, ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்து அமாவாசை வரையான, இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆனாலும் சில வேளைகளில் இருபது நாட்களாகவும் அமைவதுண்டு.
விரத வழிபாட்டில் முதல் நாள் அன்று, கேதார கெளரி நோன்புக் கயிற்றில் ஒரு முடிச்சு போடப்பட்டு, தொடர்ந்து வரும் 20 தினங்கள் 20 முடிச்சுபோட்டு, இறுதி நாள் அன்று (அதாவது இன்று) 21 நெய்வேத்திய பொருட்களுடன் விரதத்தினை நிறைவு செய்து, 21 முடிச்சுக்கள் கொண்ட நோன்பு கயிற்றினை இடது பக்க கையின் புயத்தில் கட்டுவது மரபாகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.