பிள்ளையார் ஆலயங்களில் தற்பொழுது நடைபெற்றுவரும் பெருங்கதை
பிரசுரிக்கபட்ட திகதி: 05/12/2013 (வியாழக்கிழமை)
பிள்ளையார் பெருங்கதை விரதம் தற்பொழுது சிறப்பாக பிள்ளையார் ஆலயங்களில் நடைபெற்று வருகின்றது. வல்வெட்டித்துறை மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள பிள்ளையார் ஆலயங்களிலும் இதனைக் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமான இவ்விரதம் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை முடிவுறுகின்றது.
பிள்ளையார் பெருங்கதை விரதம் – சிறு விவரணம்
விநாயகர் விரதங்கள் பல. அவற்றுள் கார்த்திகை மாதம் அபரபக்கப் பிரதமை முதல் மார்கழி மாதத்துப் பூர்வ பக்கச் சஷ்டி வரையும் உள்ள இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படுவது ‘பெருங்கதை விரதம்” ஆகும். இவ்விரதமானது விநாயக சஷ்டி, மார்கழி சஷ்டி, குமார சஷ்டி, மற்றும் பெருங்கதை விரதம் என பலவாறு அழைக்கப்படுகின்றது.
கார்த்திகைத் திங்கள் கிருஷ்ணபட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி வரையாகவுள்ள இருபத்தொரு நாட்கள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இருபத்தொரு இழையோடு கூடிய காப்பை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டி விரதத்தை ஆரம்பிப்பர்கள். முதல் இருபது நாட்களும் ஒரு பொழுது ஆகாரத்துடன் விரதமிருந்து, இறுதி நாள் உபவாசம் இருந்து, சுவாமி தரிசனம் செய்து இவ்விரதமானது நிறைவு செய்யப்படுகின்றது.
விரத கால இருபத்தொரு நாட்களும் விநாயகர் கதை கேட்பதும், விநாயகர் திருவிளையாடல்களைப் பேசக்கேட்பதும் புண்ணியமாக இந்துக்களால் கருதப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.