தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் இல்ல மெய்வன்மைப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 01.30 மணியளவில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. இரா.ஸ்ரீநடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இல்ல மெய்வன்மை போட்டிக்கு பிரதம விருந்தினராக திரு.யோகசாமி ரவீந்திரன் (பிரதிக் கல்விப்பணிப்பாளர் - நிர்வாகம் வடமராட்சி வலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ப.குமரேசன் (கிராம சேவையாளர், தொண்டைமானாறு வடக்கு ) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
விருந்தினர்கள் வீரகத்தி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பாடசாலையின் பாண்ட் வாத்திய குழுவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள் .
இவ் விளையாட்டுப்போட்டியில் ஆண்கள், பெண்களுக்கான அணிநடை, ஓட்டம், தடைஓட்டம், சிறுவர்கள் விளையாட்டு, அஞ்சலோட்டம் போன்ற பல போட்டிகள் மிகவும் சிறப்பாக நடை பெற்றன. மேல் பிரிவு மாணவ, மாணவிகளினதும் , கீழ் பிரிவு மாணவர்களினதும், இசையும்,அசைவும் சிறப்பாக நடைபெற்றது. அத்துடன் பழைய மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றது.
மாலை 06.30 மணி வரை நீடித்திருந்த இப்போட்டியை காண்பதற்கு பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
karan (srilanka)
Posted Date: February 10, 2014 at 14:53
my school thank you valvettithurai.org team
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.