வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமாதான நீதவான் திரு.பா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் மீள்பதிப்பு செய்துள்ள இயற்றமிழ் போதாகசிரியர் வயித்தியலிங்கப்பிள்ளை புலவரின் "சிந்தாமணி நிகண்டு" எதிர்வரும் 4 இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பதிப்பில் வயித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் நிகண்டுடன் அவரது வரலாற்று குறிப்பும், இதுவரை காலமும் வெளியிடப்பட்ட பலதரப்பட்ட நிகண்டுகள் பற்றிய விபரமும் சேர்க்கபட்டுள்ளது குறிப்பிடத்தகது.
சிந்தாமணி நிகண்டு (தமிழ் அகராதி) - இதுவரை உள்ள பதிப்புகள்
1. முதலாம் பதிப்பு சென்னை இலக்ஷ்மிவிலாச அச்சியந்திர சாலையில் தாது வருஷம் சித்திரைமாதம்(1867ம் வருடம்) "ககர" முதல் "னகர" ஈறாக இயற்றப்பட்டு உரையும் எழுதப்பட்டது.
2. இரண்டாவது (மீள்பதிப்பு) பதிப்பு சென்னையில் பேரரசிரியர் வ.ஜெயதேவன், இரா.பன்னிருகைவடிவேலன் ஆகியோரால் 2013 ஆண்ண்டில் வெளியிடப்பட்டது. இதில் வயித்தியலிங்கப்பிள்ளை அவர்களின் நிகண்டுடன் மேலதிகமாக அகராதிக் கிரமத்திலும் சொற்கள் எழுதப்பட்டுள்ளன.
3. மூன்றாவது பதிப்பு வல்வை பா.மீனாட்சிசுந்தரம் அவர்களால் மீள்பதிப்பு செய்யபட்டு "இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால்" எதிர்வரும் 4 ஆம் திகதி (04.04.13) வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.