கலை கலாச்சார இலக்கிய மன்றம் ஆரம்பிக்கவுள்ள கீ-போர்ட், மிருதங்கம், வயலின் பயிற்சி வகுப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2013 (திங்கட்கிழமை)
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் கீ-போர்ட், மிருதங்கம், மற்றும் வயலின் பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
24/03/2013 ல் நடைபெற்ற இசை ஓவிய பயிற்சி வகுப்புக்கள்
வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் நடாத்தப்படும் (வாரத்தில் மூன்று நாட்கள்) இசை மற்றும் ஓவியப்பயிற்சி வகுப்புக்களில் மாணவ மாணவியர் மிகவும் ஆர்வத்தோடு பயின்று வருகின்றனர்.
இசையிலும் ஓவியத்திலும் மிக மிக விருப்பத்துடன் பழகி வருகிறார்கள். எமது மன்றத்தால் இவர்களுக்காகவும், மேலும் சேர விரும்பும் மாணவ மாணவியர்களுக்காகவும் அடுத்த வாரத்தில், இசை வகுப்புக்களுக்கு மேலதிகமான(கீ-போர்ட்) இசைக்கருவிகளும், மற்றும் ஓவியப்பயிர்ச்சிக்கான பல வசதிகளும் சேர்க்கப்படவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
மிருதங்கம்,வயலின் பயிற்சி வகுப்புக்களும் கூடிய விரைவில் ஆரம்பமாகவிருக்கின்றன.
பயிலும் இந்தப்பிள்ளைகள் தமக்கான கல்வியோடு , இனி ஓவியமும், இசையும் முக்கியமான பாடமாக இருக்கவேண்டும் என்றும், இந்த இரண்டு துறைகளிலும் நாங்கள் சாதித்து பெரும் கலைஞர்களாக வர வேண்டும் என்றும் துடிப்புடன் செயற்படுகிறார்கள். வல்வையின் வருங்கால கலைச்சிற்பிகள் இவர்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.