கனடா வல்வை நலன்புரிச் சங்கம் மற்றும் கனடா வாழ் வல்வை மக்களுக்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 29/03/2013 (வெள்ளிக்கிழமை)
எதிர்வரும் 06.04 2013 அன்று நடை பெறவுள்ள தங்கள் நலன்புரிச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள். தங்கள் நிகழ்ச்சி நிரலில், தங்களின் வசதிக்கேற்ப, வல்வையின் பின்வரும் விடயங்களையும், கனடா வாழ் வல்வை மக்களுக்குத் தெரியப்படுத்துவீர்களானால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நாம் பெரிதும் நம்புகின்றோம்.
அம்மன் கோவில் தர்மகர்த்தா சபையினாரால் கட்டப்பட்டு வரும் புதிய கல்யாண மண்டபம், ஊரணி வைத்தியாலையின் 'Scanner' இயங்க முடியாத நிலை, வல்வை கலை இலக்கிய மன்றத்தினர் மேற்கொண்டுவரும் பயிற்சிகள் மற்றும் படைப்புக்கள், சென் செபஸ்தியார் தேவாலயத்தின் புனருத்தாரண வேலைகள், வல்வை குழாவிகள் கலா மன்றம், பரந்த நெற்கொழு மைதானத்தை கையகப்படுத்த மேற்கொண்டுவரும் முயற்சிகள், வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA), மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமான சம்பந்தப்பட்டவர்களின் அறிக்கைகள் மற்றும் விடயங்கள் பற்றி நாம் ஏற்கனவே எமது இணையதளத்தில் பிரசுரித்துள்ளோம்.
மேற்குறிப்பிட்டுள்ள விடயங்கள் எல்லாம் வல்வைக்குப் பொதுவானவை என்பதுடன், செய்திகள் மற்றும் விடயங்கள் நம்பகரமானவை என்பதையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்குரிய 'Scanner ' வசதிகள், கனடா வாழ் நம் வல்வை மக்களால்தான் செய்யப்பட்டுள்ளது என்பதனை நினைவூட்டி, தங்களின் நடைபெறவுள்ள ஆண்டுப் பொதுக் கூட்டம் மூலம் மேலும் பல வசதிகளை, எம் வல்வைக்குச் செய்வீர்கள் என்றும் பெரிதும் நம்புகின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.