வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 24/05/2013 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 16.05.2013 ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 9ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை 0800 மணியளவில் தொடங்கி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பத்து தினங்கள் நடைபெறும் இவ் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழாநாளை 25.05.2013 (சனிக்கிழமை) அன்று காலை 0830 மணியளவில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை (27.05.2013) பூங்காவனமும், வெள்ளிக்கிழமை (31.05.2013) கற்பூரத்திருவிழாவும் நடைபெறவுள்ளது .
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 800M தொலைவில் உள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.