கடந்த மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உலக இரத்த நன்கொடையாளர் தினமன்று, இரத்த நன்கொடையாளர்கள், ஒருகமைப்பாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என 101 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இவர்களில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு அவர்களின் அதியுயர் சேவைகள் கருதி விசேட விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. இம்மூவரில் வல்வெட்டித்துறைச் சேர்ந்த திரு.து.சக்திவேல் அவர்களுக்கு ஜனாதிபதி திரு.மகிந்த ராஜபக்ச அவர்கள் விருது வழங்கிக் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விருது திரு.சக்திவேல் அவர்களுக்கு சிறந்த இரத்த நன்கொடையாளர் மற்றும் ஒருங்கமைப்பாளர் என்ற அடிப்படையின் கீழ் வழங்கப்பட்டிருந்தது.
வல்வையில் பிறந்து தொடர்ந்தும் வல்வையில் வசித்து வரும் திரு.சக்திவேல் அவர்கள் ஊடகங்கள் பெரிதாக அடிபடாத வல்வையின் ஒரு சமூகசேவையாளர். தனது ஆரம்பக் கல்வியை வல்வை சிவகுரு வித்தியாசாலையிலும் பின்னர் வல்வை சிதம்பரக் கல்லுரியிலும் கல்வி பயின்றுள்ளார்.
கல்லூரிக் காலங்களில் சாரணர் உட்பட்ட பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திய இவர், வல்வையைப் பெருமைப்படுத்தும் சமூக நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபடுத்திவருகின்றார்.
வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையினால் ஒவ்வொரு நான்கு மாதங்களும் முன்னெடுக்கப்பட்டுவரும் இரத்ததான முகாமை தொடர்ந்து வெற்றிகரமாகச் செயற்படுத்திவருவதில் இவரின் சிறிய பங்கும் முன் நிற்பது குறிப்பிடத்தக்கது.
இவர் போன்றவர்கள் ஜனாதிபதி அவர்களால் கெளரவிக்கப்பட்டுள்ளது போல் இங்குள்ள பொது அமைப்புக்களாலும் கெளரவிக்கப்படவேண்டும்.
பள்ளிக் காலத்தில் சாரணராக
உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் பங்கேற்ற அன்னபூரணியுடன்
கடந்த மாதம் ஜனாதிபதிமாளிகையில் நடந்த இரத்த நன்கொடையாளர் தினத்தன்று விருது பெறுகையில்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.