மின் அலங்காரங்கள், கலைநிகழ்வுகள் மற்றும் கச்சேரிகளுடன் வல்வெட்டித்துறை நெடியகாட்டு பூங்காவனத் திருவிழா நிறைவு
பிரசுரிக்கபட்ட திகதி: 24/08/2013 (சனிக்கிழமை)
நடந்து முடிந்த வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தைத் தொடர்ந்து, நேற்று பூங்காவனத் திருவிழா சிறப்புற நடைபெற்று முடிவடைந்துள்ளது. நேற்று மாலை சுமார் 05:00 மணியளவில் வசந்த மண்டபப் பூஜையுடன் ஆரம்பித்த பூங்காவனத் திருவிழா, பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய கலை நிகழ்வுகள் மற்றும் மேளக் கச்சேரிகள் காரணமாக இரவு 12:00 மணிவரை நீடித்திருந்தது.
ஆலய கோபுரம், குளம் மற்றும் ஆலய சுற்று வளாகம் அனைத்தும் பல்வேறுவகையான மின் சோடனைகளால் கண்களைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறை நெடியகாட்டுப் பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 12 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, கடந்த 21 ஆம் திகதி தீர்த்தோச்சவத்துடன் நிறைவெய்தியது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.