"சிவதீபம்" - மலர் 01 எனும் நூல் வெளியீடு வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இன்று நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/10/2013 (வியாழக்கிழமை)
"சிவதீபம் - மலர் 01" எனும் நூல் வெளியீடு இன்று வல்வை சிவகுரு வித்தியாசாலையில் சிறப்புற இடம்பெற்றிருந்தது.
பாடசாலை அதிபர் திரு ஆ. சிவநாதன் தலைமையில் பாடசாலையின் தையல்பாகர் அரங்கில் இந்நிகழ்வு பிற்பகல் சுமார் 02.30 மணியளவில் ஆரம்பித்திருந்தது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், பருத்தித்துறை) அவர்கள் கலந்துகொள்ள, ஆசியுரையை சிவஸ்ரீ தண்டபாணிக தேசிகர் மற்றும் பிரம்மஸ்ரீ ப .மனோகர குருக்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இதைதொடர்ந்து வரவேற்புரையை திருமதி.நகுலேஸ்வரன் அவர்கள் வழங்க, வாழ்த்துரையை வடமாராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சி.நந்தகுமார் அவர்கள் வழங்க, வெளியீட்டுரையை முன்னாள் யாழ். பல்கலைக்கழகம் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் S . சிவலிங்கராஜா அவர்களும் மதிப்பீட்டுரையை யாழ்.பல்கலைக்கழகம் சமூகவியல்துறை விரிவுரையாளர், திரு இ.இராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
உரைகளைத் தொடர்ந்து நூலின் முதற்பிரதியை, சிவகுரு வித்தியாசாலை பழைய மாணவர் சங்கத் தலைவர் செல்வன். வி.கவிச்செல்வன் அவர்கள் பெற்றுக்கொள்ள தொடந்து சிறப்புப்பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
ஏற்புரையையும் நன்றியுரையையும் சிவதீபம் இதழ் ஆசிரியர் திருமதி பு.சுரேஷ்குமார் அவர்கள் வழங்கியிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.