வல்வை நகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் இன்று 18 ஆம் திகதி காலை 0830 மணிக்கு வல்வை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த வல்வை நகரசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காதலால், இடம்பெறவுள்ள கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பின் முடிவில் தமிழ் தேசிய பேரவை (Tamil National Forum) 7:6 என்ற கணக்கில் ஒரு மேலதிக வாக்கால் பேரவை வெற்றி பெற்று, தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகளை பெற்றுள்ளனர்.
ஆனாலும் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாதலால் எதிர்வரும் காலங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் பெருத்த வாதங்கள் இடம்பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் சவால்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட்க்கான வாக்கெடுப்புகளில் தமிழ் தேசிய பேரவைக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் குழப்பங்கள் பலத்த சவால்கள் இடம்பெற வாய்ப்புண்டு.
2009 ஆம் ஆண்டுக்கு பின்னர், வல்வை நகரசபையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாததால் கடந்த காலங்களில், பட்ஜெட் விவாதங்களில் மிகுந்த குழப்பங்கள் இடம்பெற்று (சொந்தக் கட்சிக்குள்ளும் ஆள் மாறாட்டம்) சபை கலைக்கபட்டு ''செயலாளரின்" கீழ் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.