இந்திய மீனவர் அத்துமீறளுக்கு எதிராக யாழில் பல இடங்களில் மீனவர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தின் தொடர்ச்சியாக வல்வையிலும் இன்று எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வல்வை வாடி ஒழுங்கை பகுதியில், வல்வெட்டித்துறை - தொண்டைமானாறு பிரதான வீதியில், படகினை வீதிக்குக் குறுக்காக வைத்து, வீதியை வழி மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை பருத்தித்துறை சூப்பர் மடம் பகுதியில் நேற்று இரண்டாவது நாளாகவும் மீன்வர் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 27ஆம் திகதி வடமராட்சி கிழக்கு வத்திராயனில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் நேற்றுமுன்தினம் சடலங்களாகக் கரையொதுங்கியுள்ளனர். அவர்களின் உயிரிழப்புக்கு இந்திய இழுவைப் படகுகளே காரணம் என்று உள்ளூர் மீனவர்கள் நம்பும் நிலையில், நேற்றுமுன்தினம் முதல் பருத்தித்துறை மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை முதல் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்திய இழுவைப் படகுகளால் அறுக்கப்பட்ட தங்கள் வலைகளை வீதியின் குறுக்கே வைத்து அவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்தன. தங்கள் கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்திருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.