இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (The Bar Association of Sri Lanka- BASL), நேற்று பிற்பகல், இலங்கை பல்கலைக்கழகங்களில் கேலிவதை (Ragging) என்பதற்கும் அதன் பயங்கர விளைவுகளுக்கும் (Other form of violence) முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நிவாரணங்களை நாடி ஒரு அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கானது சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த 23 வயதான சரித் தில்சான் தயானந்த என்பவர், கேலிவதை காரணமாக தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான நிகழ்வைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், உரிய நடவடிக்கை எடுக்காமையும், தண்டனை இன்றி விட்டுவைக்கும் பண்பையும் உள்ளடக்கிய நிறுவனங்கள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை அரசியலமைப்பின் 12(1) மற்றும் 11 ஆம் உரைமைகளின் கீழ் உள்ள, சட்டத்தின் கீழ் சமத்துவத்துக்கான உரிமையையும், சித்திரவதைக்குள்ளாகாமல் இருப்பதற்குச் சுதந்திரம் என்கிற அடிப்படை உரிமைகள் கேலிவதை மூலம் மீறப்பட்டுள்ளன எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சரித் தில்சானுக்கான நீதியை வழங்குவதற்கும், நீண்ட காலமாக நிலவி வரும் அமைப்புசார் குறைபாடுகளை திருத்துவதற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தை நோக்கி நடவடிக்கைகள் எடுக்க முனைகிறது. அதற்கான கோரிக்கைகள் பின்வருமாறு:
* இந்த தவறுகளுக்குப் பொறுப்புள்ள அதிகாரிகளும் நிறுவனங்களும் பதிலளிக்கச் செய்யப்பட வேண்டும்.
* கேலிவதையை தடுக்கும் சட்டங்களும் பல்கலைக்கழக விதிமுறைகளும் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
* மாணவர்களை பாதுகாக்கும் வகையில் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு மாணவரும் மரியாதையும் பாதுகாப்பும் உடைய சூழலில் கல்வியைத் தொடரும் உரிமை கொண்டிருக்கின்றனர் என்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.