ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் யாழ் பிராந்தியம் நடத்தும் கலைவிழா எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் யாழ் பிராந்தியம் நடத்தும் மேற்படி கலைவிழாவில் தென்னிந்திய தொலைக்காட்சி புகழ் ஈழத்துப் பாடகர்கள் உட்படப் பலர் பங்குபற்ற இருக்கின்றனர்.
விழாவுக்கான நுழைவு அனுமதியை மண்டப வாசலில் பெற்றுக் கொள்ளலாம்.
நாடளாவிய ரீதியில் மொத்தம் ஒன்பது பிராந்தியக் கிழைகளைக் கொண்டு இயங்கி வரும் இக் கலைஞர் ஒன்றியமானது, ஈழத்துக் கலைகளை சமூக ஆரோக்கியத்துக்கான மக்களுக்குரிய கலைகளாக மெருகேற்றி அதற்கூடாக மானுட சுதந்திரத்தையும் சமத்துவ நெறியையும் அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்துக்காகப் பயணித்துக்கொண்nருக்கிறது.
மனித மேம்பாட்டுக்கான அப் பயணத்தில் இசை நிகழ்வுகள், ஓவியக் கண்காட்சி, கலைதொடர்பான கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், பயிலரங்குகள், கலந்துரையாடல்கள், கூட்டுப்படிப்புகள், கவியரங்குகள், விவாத அரங்குகள், போன்றவற்றை நடத்தி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக் கலைஞர் ஒன்றியத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில் கடந்த மாதத்தில் ஒன்றியத்தின் கிளிநொச்சிப் பிராந்தியக் கலைவிழா சிறப்புற நடைபெற்றிருப்பதுவும், இம்மாதம் 31 ஆம் திகதி ஒன்றியத்தின் திருகோணமலைப் பிராந்தியத்தின் புத்தாண்டுக் கலைவிழாவும், அடுத்த மாதம் மன்னார் பிராந்தியத்தில் பௌர்ணமிக் கலைவிழாவும் நடைபெறவிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த மாதத் தொடக்கத்தில் நாடளாவிய ரீதியில் ஒரு கவிதைப்போட்டியையும் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளையும் ஒன்றியம் செய்திருக்கிறது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.