சன்னிதியான் ஆச்சிரமத்தினால் வன்னி பிரதேசத்தில் உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/12/2023 (வியாழக்கிழமை)
தொண்டைமானாறு சன்னிதியான் ஆச்சிரமத்தினால் வன்னிப்பிரதேசத்தில் அண்மையில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கிராமத்தில் வசிக்கும் குடும்பமொன்றிற்கு அவர்களது வீட்டைத் திருத்தம் செய்வதற்காக 150,000 ரூபா வழங்கப்பட்டதுடன், வற்றாப்பாளையைச் சேர்ந்த பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவியொருவருக்கு அவரது அடிப்படைச் செலவிற்காக 50,000 ரூபா நிதியும், வவுனியா புதிய கற்பகபுரத்தைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்ட நெளுங்குளம் கலைமகள் வித்தியாலய்த்தில் சாதாரணதரத்தில் கல்விகற்று சித்தியடைந்த மாணவிக்கு 47500 ரூபா பெறுமதியான துவிச் சக்கரவண்டியும் வழங்கபப்ட்டதுடன், வவுனியா, ஈச்சங்குளம் கோதண்டர் நொச்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்விகற்கும் மாணவிக்கு 47500 ரூபா பெறுமதியான துவிச் சக்கரவண்டியும் வழங்கப்பட்டது.
மேலும் வாவினியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த பூம்புகார் கண்ணகி வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நோக்கில் 81000 ரூபா வழங்கப்பட்டது.
குறித்த உதவிகளை சன்னிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் சென்று வழங்கினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.