இன்றைய நாளில் - உள்நாட்டுப்போரில் இடம்பெற்ற முதலாவது தற்கொலைத்தாக்குதல்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/07/2019 (வெள்ளிக்கிழமை)
இன்றைய நாளான 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம் திகதி அன்று யாழ் வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தற்கொலைத் தாக்குதல் இதுவாகும்.
யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட 'மில்லர்' என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் என்பவரே இவ்வாறாக தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஆவார். மில்லர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர் ஆவார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வடமராட்சிப் பிரதேசத்தை ஆபரேஷன் லிபரேசன் என்னும் இராணுவ நடவடிக்கை மூலம் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியதைத் தொடர்ந்தே குறித்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
கீழே படத்தில் 2004 ஆம் ஆண்டு சமாதான காலத்தின் போது நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த மில்லர் ஞாபகார்த்த நினைவு மண்டபம். (படம் - விக்கிப்பீடியா)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.