இலங்கை வானொலி முன்னாள் அறிவிப்பாளர் புவனலோஜினி காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)
இலங்கை வானொலி வர்த்தக சேவையின் முன்னாள் சிரேஷ்ட அறிவிப்பாளர்களில் ஒருவரான திருமதி புவனலோஜினி நடராஜசிவம் அவர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். இவருக்கு வயது 74.
வல்வெட்டிதுறையப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 70 களிலிருந்து 80 களின் இறுதிப் பகுதி வரை இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளராக விளங்கியிருந்தார். அன்னாரின் கணவர் அமரர் நடராஜசிவமும் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.
ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். திருமதி புவனலோஜனி எழுதிய பல சிறுகதைகள் வீரகேசரி உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன.
சூரியன் எப்.எம் வானொலியின் ஸ்தாபக முகாமையாளர் நடராஜசிவம் அவர்கள், அங்கு பணியாற்றிய காலத்தில், திறமையுள்ள பலரை இனங்கண்டு, அந்த வானொலிக்கு அறிவிப்பாளர்களாக சேர்ப்பதில் திருமதி புவனலோஜினியும் பின்னணியில் இருந்து பங்கு வகுத்திருந்தார்..
சூரியன் எப்.எம் வானொலியின் ஒலிபரப்பு தொடங்கப்பட்டபோது, அந்த வானொலியின் ‘கருப்பொருள்’ பாடலான (Theme song) ‘தங்கச் சூரியனே’ எனும் பாடலை, இசைத் தட்டை ஒலிக்க விட்டு ஆரம்பித்து வைத்தவர் புவனலோஜனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.