முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரையான நடைபவனி இடம்பெறவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொத்துவிலில் இருந்தும் நாளை வல்வெட்டிதுறையில் இருந்தும் ஆரம்பமாகும் இந்த நடை பவனியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
யாழ் வல்வெட்டிதுறையில் இருந்து ஆரம்பமாகும் நடை பவனி தென்மராட்சி, பரந்தன், பூநகரி, வெள்ளாங்குளம் மாங்குளம் ஊடாக முள்ளிவாய்க்கால் சென்றடையவுள்ளது.(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.