தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் திரு.பண்டிதரின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. கம்பர்மலை, வல்வெட்டிதுறையில் அமைந்துள்ள திரு.பண்டிதரின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திரு.பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் திரு எம் கே சிவாஜிலிங்கம் மற்றும் வல்வை நகரசபை உறுப்பினர் திரு.சதீஷ் ஆகியோர் திரு.பண்டிதரின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்
இதேவேளை யாழ் மாநகர சபை முதல்வர் திரு.மணிவண்ணன் உட்பட்ட வேறு சில அரசியற் பிரமுகர்களும் வேறாக திரு.பண்டிதர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்..
1985 ஆம் ஆண்டு அச்சுவேலிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை இலங்கை இராணுவத்தினர் சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்குதலில் பண்டிதர் உட்பட 5 விடுதலைப் புலி உறுப்பினர்கள் மரணமடைந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: January 09, 2022 at 20:32
மண் விடுதலைக்காக இவர்கள் செய்த அதி உன்னதமான உயரிய உயிர்கொடைகள் ஒருநாள் தமிழர்களின் விடுதலையைபெற்றுத்தரும் வணங்குகின்றோம்
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.