பருத்தித்துறை வேலும்மயிலும் பவுண்டேசன் இல் கல்விகற்று, கடந்த 2020 ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகளில் 9A மற்றும் 3A பெற்ற மாணவர்களுக்கு TAB வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையுடையவர்கள் என தெரிவு செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு TAB மற்றும் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நிறுவனத்தில் கணணிக்கல்வியை நிறைவுசெய்த 15 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு கடந்த 04.02.2022 அன்று பருத்திதுறையில் இடம்பெற்றது. நிகழ்வில் வேலும்மயிலும் பவுண்டேசன் நிறுவுனர் திரு.வேலும்மயிலும் தயானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் நடராஜசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டார்.
நிகழ்வில் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் திரு.தே .சிவகுமாரசாமி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.