பல்துறை சிறுவர் தமிழ் விற்பனர் சிவலிங்கம் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2022 (வியாழக்கிழமை)
ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும், கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்ற மாஸ்டர் சிவலிங்கம் என அழைக்கப்படும் இரத்தினம் சிவலிங்கம் நேற்று காலமானார். இவருக்கு வயது 89.
மட்டக்களப்பு மாவட்டம், மஞ்சந்தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள்,. ஐம்பது ஆண்டுகளாக சிறுவர் கதைகள் சொல்லும் பணியையே அவர் தொழிலாகக் கொண்டிருந்தார். மட்டக்களப்பு மாநகர சபையில் கதை சொல்லும் கலைஞனாகவும் பணியாற்றியிருந்தார். சென்னை சந்தனு கலைக்கல்லூரியில் ஓராண்டு கார்ட்டூன் கலையும், வில்லிசைக் கலையும் படித்திருக்கிறார்.
இலங்கை வானொலியில் கதை சொல்ல ஆரம்பித்த இவர், பின்னர் இலங்கைத் தொலைக்காட்சியிலும் பங்கேற்று இருந்தார். இவர் கொழும்பில் இருந்து வெளியான தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.