வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவம் இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இன்று புதன் கிழமை அதிகாலை 3.30 க்கு திருவாதிரை உற்சவத்திற்கான மூலமூர்த்திக்கான அபிஷேகம் ஆரம்பமாகி பூசைகள் இடம்பெற்று அதிகாலை 5 மணிக்கு நடேசருக்குரிய ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை பூசை இடம்பெற்று காலை 7 மணியளவில் வசந்த மண்டபபூசை நடைபெற்று திருவெம்பாவை பாடல் பாடப்பட்டு பின் பெருமான் உள்வீதி வலம்வந்து தீர்த்தகிணற்றில் திருவாதிரை தீர்த்தம் நடைபெற்றது. வெளிவீதியில் திருவாதிரை திருநடனமும், அம்மை அப்பனின் ஊடற்காட்சியும் இடம்பெற்றது.
இலங்கையில் பல சிவன் கோவில்கள் இருந்த போதிலும், நடராஜர் திருக்கூத்து நடைபெறுவது ஒரு சில சிவன் கோவில்களில் மட்டுமே. அத்தகைய நடராஜர் திருக்கூத்து நடைபெறும் கோவில்களில், வல்வெட்டித்துறை சிவன் கோவிலும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விசேடமாக அமைக்கப்பட்ட பொறிமுறையுடன் கூடிய சகடையில் (manually operated car), நடராஜப்பெருமான் வீதி உலாவும் திருக்கூத்தும் சிறப்பாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
திருவாதிரை – சிறு விவரணம்
மார்கழி மாதம் தேவர்களின் வைகறை பூஜை நேரமாகும். அதனால் திருவாதிரையன்று நடராசருக்கு வைகறையில் அபிஷேகம் நடை பெறும். திருவெம்பாவை பத்து நாட்கள் நடை பெறும். பத்தாம் நாளான இன்று திருவாதிரைத் திருநாளில் நடராஜர் திருக்கூத்தும், வீதி உலா நடைபெறுவது வழமை.
மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் கூடிய பௌர்ணமியன்று கொண்டாடப்படும் ஆருத்ரா தரிசனம் என்ற சிவபெருமானின் ஆனந்த திருநடன நன்னாள் ஆகும். நடராசருக்கு வருடம் ஆறு அபிஷேகம் நடைபெறுவது வழமை. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை, மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.
ஈழத்துச் சிதம்பரம் என்று போற்றப்படும் இலங்கையில் வடபால் அமைந்துள்ள காரைநகர்ச் சிவன் ஆலயத்திலும், இந்தியாவின் தமிழகத்தில் அமைந்துள்ள சிதம்பரத்திலும் மார்கழித் திருவாதிரை மிகச் சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.