லீக் சுற்றுக்குள் நுழைந்தது குருநகர் பாடுமீன் அணி...
பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2022 (புதன்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஒரு ஆட்டமானது இன்றைய தினம் ( 04/05/2022) வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து தேவன்பிட்டி சென்சேவியர் விளையாட்டுக்கழகமானது மோதியது. பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் விளையாட்டுக்கழகமானது 3:0 என்ற கோல்கணக்கில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக்கழகமானது வெற்றிபெற்று லீக் சுற்றுக்கு தகுதிபெற்றது.
பாடுமீன் அணிசார்பாக சாந்தன், சயந்தன், விஷோத் தலா ஒவ்வொரு கோலினை பெற்றுக்கொடுத்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக பாடுமீன் அணியின் பின்கள வீரர் சயந்தன் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.