வல்வை வி.க உதைபந்து - கொற்றாவத்தை றேஞ்சஸ் மயிரிழையில் இறுதிக்கு தகுதி
பிரசுரிக்கபட்ட திகதி: 13/06/2022 (திங்கட்கிழமை)
வல்வை விளையாட்டுக்கழகம் தனது வைரவிழாவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும் 9 நபர் கொண்ட மாபெரும் வடமாகாண ரீதியிலான உதைபந்தாட்ட போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இடம்பெற்றது.
இன்றைய அரையிறுதியாட்டத்தில் கிளிநொச்சியின் முன்னணி அணிகளில் ஒன்றான வலைப்பாடு ஜெகமீட்பர் அணியினை எதிர்த்து வடமராட்சியின் முன்னணி அணிகளில் ஒன்றான கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி மோதியது.
பெருந்திரளான ரசிகர்கள் மத்தியில இடம்பெற்ற ஆட்டமானது 1:1 என்ற கோல்கணக்கில் சமனிலை முடிவடைந்தது. வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 7: 6 என்ற கோல்கணக்கில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியானது வெற்றியினை பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.