வல்வை நகரசபையால் திட்டமிடப்பட்டுள்ள வல்வை நகர மைய அபிவிருத்தி வல்வெட்டித்துறை சந்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டிட கலை நிபுணர் திரு.மயூரநாதன் வருகை தந்து இடங்களை மதிப்பிட்டு திட்ட வரைபுகளை சமர்ப்பிக்க உள்ளார்.
தற்போது நகரசபை நிதி வளங்கள் ஊடாக செயல்படுத்தப்படும் நகர மைய அபிவிருத்திகள்:
நவீன நூலகம் - மரக்கறி சந்தை முதலாம் மாடியில் அமைக்கப்படவுள்ளது.
நிகழ்வு மண்டபம் - மரக்கறி சந்தை இரண்டாம் மாடி
சிறிய பூங்கா - பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள வெற்றிடம்
உணவுச்சாலை (Food Court ) - மரக்கறி சந்தை கட்டிடம்
பல்பொருள் அங்காடி - ரேவடிக் கடற்கரை, நீச்சல் தடாகத்துக்கு அருகில்
தற்போது மரக்கறி சந்தை கட்டிடத்தில் இயங்கும் மரக்கறி வியாபாரம் நவீன சந்தைக்கு மாற்றப்படவுள்ளது..
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.