1989 வல்வைப்படுகொலைகள் நீண்ட காலத்தின்பின் அனுஸ்டிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 02/08/2018 (வியாழக்கிழமை)
வல்வெட்டித்துறையில் இன்றைய நாளான 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியும் அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களும் நடைபெற்ற படுகொலைகள் நிகழ்வு இன்று வல்வையில் அனுஸ்டிக்கப்பட்டது.
வல்வைப்படுகொலைகள் 1989 பின்னணி
அன்றைய தினம் காலை சுமார் 0 9 3 0 மணியளவில் ஊரிக்காட்டில் அமைந்திருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் (Indian peace keeping forces - IPKF) முகாமிலிருந்து புறப்பட்டு, வல்வெட்டித்துறை - பருத்தித்துறை பிரதான வீதி மற்றும் சிவபுரவீதி வழியாக ரோந்து மேற்கொண்டிருந்த இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வல்வை சந்தியை அண்டிய பகுதிகளில் கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.
வல்வைச் சந்தி, பிரதான வீதி, பெட்ரோல் செட் மற்றும் சிவபுரவீதி என்னும் பிரதேசத்தை உள்ளடக்கிய பெட்டி வடிவ பிரதேசத்திலேயே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றதாலும், காலை நேரம் என்பதாலும் பல பொது மக்கள் சண்டை நடைபெற்ற பகுதிக்குள் அகப்பட்டும் கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் 60 ற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், தற்போதைய வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணானந்தராசா உட்பட்ட பலர் படுகாயமடைந்திருந்தனர்.
முதலாவது சுடரினை, நிகழ்வில் மரணித்தவர்களின் உறவினர்களில் ஒருவரான திரு.மு.பிரேம்குமாரும் அடுத்த சுடரினை, குறித்த சம்பவத்தில் காயமடைந்த வல்வை நகரசபைத் தலைவர் திரு.கோ.கருணானந்தராசா அவர்களும் ஏற்றி வைத்தனர்.
நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் திரு.M.K.சிவாஜிலிங்கம், வல்வை நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நீண்ட இடைவெளியின் பின்னர் படுகொலையானவர்கள் அனுடிப்பு இங்கு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.