வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாகவும் நடாத்தும், வடமாகாண ரீதியிலான 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி, நேற்று வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
நேற்று இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் வதிரி டைமன்ஸ் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகமானது மோதியது. இப் போட்டியானது எவ்வித கோல்களுமின்றி நிறைவுக்கு வந்தது. எனவே வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடுவரினால் வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 4:3 என்ற கோல்கணக்கில் டைமன்ஸ் அணியானது வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக டைமன்ஸ் அணியின் மதுசூதனன் தெரிவு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கம்பர்மலை யங்கபன்ஸ் விளையாட்டுக்கழகமானது மோதியது. இப்போட்டியில் 1:1 என்ற கோல்கணக்கில் சமனிலையில் முடிவடைந்தது. வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் 4:3 என்ற கோல்கணக்கில் யங்கபன்ஸ் விளையாட்டுக்கழகமானது வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக கம்பர்மலை யங்கபன்ஸ் அணியின் பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.