மகளிர் பாடசாலை ஆரம்ப பிரிவுகளில் ஆண் மாணவர்களை இணைக்காதீர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/07/2023 (புதன்கிழமை)
மகளிர் பாடசாலை ஆரம்ப பிரிவுகளில் ஆண் மாணவர்களை இணைக்காதீர்கள் -
குறைந்த மாணவர்களுடன் இயங்கும் பாடசாலை அதிபர்கள் கோரிக்கை
மகளிர் பாடசாலை ஆரம்ப பிரிவுகளில் ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்வதைத் தவிர்க்குமாறு அச்சுவேலியில் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் செயற்படும் பாடசாலை அதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கையில் ,
அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி ஆரம்பபிரிவில் ஆண் மாணவர்களையும் இணைத்தே கற்றல் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெறுகின்றன. இதனால் அச்சுவேலியை சூழ்வுள்ள ஆரம்பப் பிரிவு மாணவர்களை கொண்டு இயங்கும் அச்சுவேலி ஆரம்ப பாடசாலை, சரஸ்வதி வித்தியாலயம், பத்தமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம், வளலாய் அ.மி.த.க. பாடசாலை, கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம், நவக்கிரி அ.த.க. பாடசாலை மற்றும் இடைக்காடு மகா வித்தியாலயம் போன்றன மாணவர்கள் எண்ணிக்கையை காட்டுவதில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றன.
அச்சுவேலி பகுதியில் இருந்து யாழ். நகர்ப்புற பகுதியை நோக்கி மாணவர்கள் செல்வது ஒரு புறமிருக்க கிராம சேவகர் பிரிவுகளை கருத்தில் கொள்ளாது பாடசாலைகளில் மானவ்ர்களை உள்வாங்குதல் மற்றும் மகளிர் கல்லூரிகளில் ஆண் மாணவர்களை இணைத்துக் கொள்ளல் போண்டா செயற்பாடுகளால் மாணவர்களை குறைவாக கொண்டுள்ள பாடசாலைகள் மானவ்ர்களின் எண்ணிக்கை காட்டுவதில் இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.
இதனால் இப் பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது. இவ்விடயத்தை கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமென கோருகின்றோமென தெரிவித்தனர் .(தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.