அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் 18 பேர் படகு விபத்தில்
பலி
பிரசுரிக்கபட்ட திகதி: 27/01/2014 (திங்கட்கிழமை)
அந்தமான் தீவுக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் 18 பேர் படகு விபத்தில் பலியாகியுள்ளாரகள்.
நேற்றைய தினம் (26/01/14) மாலையில் ரோஸ் தீவில் இருந்து வடக்கு வங்காள வளைகுடாப் பகுதியில் உள்ள தீவு ஒன்றுக்கு படகில் செல்லும் வேளையில், எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததினால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். விபத்தின் போது படகில் 32 பேர் இருந்துள்ளதாக தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட படகில் உயிர்க்காப்பு கவசமோ, உதவியாளர்களோ இல்லாததினால் அதிகமான உயிரிழப்பு மேலும் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.
இந்தியாவிற்குச் சொந்தமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இலங்கையின் முல்லைத்தீவிற்கு கிழக்காக சுமார் 800 கடல் மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.