வல்வை போலிஸ் அத்தியட்சகர், வல்வை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட வி.க இடையிலான சந்திப்பு, புத்தாண்டையொட்டி விளையாட்டுப் போட்டி நடாத்த போலீஸ் முடிவு
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2014 (சனிக்கிழமை)
21 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 31 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த அங்கத்துவர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், போலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தம்மால் எதிர்வரும் சித்திரை புத்தாண்டையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள விளையாட்டுப் போட்டிகள் சம்பந்தமாக விளக்கப்பட்டிருந்தது.
அதாவது எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வல்வை போலீஸ் நிலைய பிரதேசத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான மாபெரும் விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இப்போட்டியில் சகல விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளதுடன், மேலும் உள்ளூருடன் தொடர்புடைய விளையாட்டுக்களையும் பிரஸ்தாபிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட போட்டியை ஒழுங்கமைப்பதற்காக 16 பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் போலிஸ் தரப்பைச் சார்ந்தவர். ஏனையவர்கள் இங்குள்ள சம்பந்தப்பட்ட விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தவர்கள். இதற்கு தலைவராக முன்னாள் வல்வை விளையாட்டுக் கழகத் தலைவர் திரு.மு.தங்கவேல் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இக் குழுவானது எதிர்வரும் 2 ஆம் மற்றும் 9 ஆம் திகதி கூடி மேற்படி போட்டி சம்பந்தமாக ஆராயவுள்ளது.
போட்டிகள் எதிர்வரும் சித்திரை 12 ஆம் திகதி உடுப்பிட்டியிலும், வல்வெட்டித்துறையிலும் நடைபெறவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.