பாம்பன் பாலம் - இன்றுடன் 100 ஆவது வருடம் பூர்த்தி (காணொளிகள் இணைப்பு)
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2014 (திங்கட்கிழமை)
இந்தியாவின் தமிழகத்தில் தென் கோடியில் அமைந்துள்ள பாம்பன் பாலம் தொழிற்படத் தொடங்கி இன்றுடன் 100 வருடங்கள் பூர்த்தியாகின்றது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் நாம் பாம்பன் பாலத்தை பலமுறை உச்சரித்து இருக்கின்றோம். காரணம் இது பாக்கு நீரிணையில், தலைமன்னாருக்கு மிக அண்மையில் உள்ளதால் ஆகும்.
பாம்பன் பாலம் - பகல் நேரத்தில்
1800 இல் ‘’இந்திய-இலங்கை திட்டம்” பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதுபோல், ஒரு பாலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில், அதாவது தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் அமைக்கப்பட்டால், நாம் இப் பாம்பன் பாலத்தின் வழியாக கண்டிப்பாகச் செல்லநேரிடும்.
2006 மீட்டர் நீளமான பாம்பன் பாலம் இந்தியாவில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பந்திரா-வேர்லி (Bandra - Vorli) பாலத்துக்கு அடுத்த நிலையில் அமைந்துள்ள 2 ஆவது பெரிய பாலமாகும். இது தமிழகத்தின் பாம்பன் தீவை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கின்றது.
இந்துக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க விரும்பும் இரு தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம் (அடுத்தது உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள காசி) செல்வதற்கு பாம்பன் பாலம், குறிப்பாக புகையிரதத்தின் மூலமாக இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வதற்கு பாம்பன் பாலம் பிரதான வழியாகவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.