2014 ஆம் ஆண்டிற்கான வல்வை நகரசபையின் வரவு செலவுத் திட்டமானது முறையற்ற வகையில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி வல்வை நகரசபையைத் சேர்ந்த பிரதி நகரசபைத் தவிசாளர் திரு.சதீஷ் உட்பட்ட 5 உறுப்பினர்கள் யாழ் மேல் நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கினை எதிர்வரும் சித்திரை 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்புக்கு கடந்த டிசெம்பர் 27 ஆம் திகதி விடப்பட்ட பொழுது, இந்த வரவு செலவு திட்ட அமர்விற்காக வல்வை நகராட்சி மன்றத்தின் மனுதாரர்களான 5 உறுப்பினர்கள் நகராட்சி மன்றத்திற்கு உள்ளே செல்ல முற்பட்ட பொழுது இவர்கள் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்ததும், இதனால் இவர்கள் மேற்குறிப்பிட்ட வழக்கைத் தொடர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.