மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களிற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது
பிரசுரிக்கபட்ட திகதி: 27/03/2014 (வியாழக்கிழமை)
மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல்களிற்கான வாக்கெடுப்பு நாளை மறுதினம் 29.03.14 சனிக்கிழமை காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தல் பரப்புரைகள் ஏற்கனவே நேற்று முன்தினம் இரவு 12 மணியுடன் முடிவடைந்துள்ளன. ஆனாலும் தேர்தல் பரப்புரைகளிற்கென கட்சிகளால் அமைக்கப்பட்ட அலுவலகங்களை நேற்று இரவு 12 மணிவரை உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்ததுடன் வெள்ளிகிழமை காலைக்குள் அலுவலகங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தமது அடையாளங்களை உறுதிப் படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இதற்காக தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அத்தாட்சிப்பத்திரம், ஓய்வூதியர்கள் அடையாள அட்டை, தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்த முடியும் என அறிவிகப்ப்ட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.