தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தினால் வடமராட்சி உட்பட்ட விளையாட்டுக் கழகங்க ளிற்கிடையில் நடாத்தப்பட்டுவரும் 20 ஓவர்கள் கொண்ட மென்பந்து போட்டிகளின் வரிசையில் இன்று வல்வை விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை நெடியகாடு அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெடியகாடு அணி சகல விக்கற்றுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நெடியகாடு அணி சார்பில் தீபன்ராஜ் 41 பெற்றிருந்தார்.
அடுத்து 120 ஓட்டங்கள் என்னும் இலக்குடன் துடுப்பெடுத்த வல்வை அணி 18 ஓவர்களில் இலக்கை எட்டி நெடியகாட்டை வெற்றி கொண்டது. வல்வை அணி சார்பில் ஜெகன் ஆட்டம் இழக்காது 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.