வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் 2014 மகோற்சவ விஞ்ஞாபனம் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரசுரிக்கபட்ட திகதி: 24/04/2014 (வியாழக்கிழமை)
கடந்த 20ம் திகதி புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது இவ்வாண்டுக்கான(2014) மகோற்சவ விஞ்ஞாபனம் திருத்தங்களுடன் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் 28.04.2014 திங்கட்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு காத்தவராய சுவாமி ஊர்வலத்துடன் ஆரம்பித்து 19.05.2014 திங்கட்கிழமை இரவு கற்பூர திருவிழாவுடன் நிறைவுறுகிறது.
கொடியேற்ற உற்சவம் 30.04.2014 புதன்கிழமை காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள அதேவேளை, 07.05.2014 அன்று மாலை 4.30 மணியளவில் நெடியாகாட்டு பிள்ளையார் கோவில் சென்று அங்கு வேட்டை திருவிழா நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் 08.05.2014 அன்று பாம்பு திருவிழா இடம்பெறவுள்ளது. தொடர்ந்து 10.05.2014 அன்று பூங்காவனமும்,11.05.2014 அன்று புலிவேட்டையும், தொடர்ந்து மறுநாள் 12.05.2014 சப்பற திருவிழாவும் இடம்பெற்று 13.05.2014 காலை 06.30 மணிக்கு தேர்த்திருவிழா விசேட வசந்த மண்டப பூசை இடம்பெற்று 08.30 மணிக்கு அம்பாள் தேர் வலம்வரவுள்ளார்.
தேர்த் தீர்விழாவைத் தொடர்ந்து 14.05.2014 தீர்த்த திருவிழா ஊரணி சமுத்திரத்தில்இடம்பெற்று பின் நெடியகாட்டு பிள்ளையார் கோவிலில் தங்கி இரவே ஆலயம் திரும்பவுள்ளார்.
இதேவேளை பகல் திருவிழாவுக்கான வசந்த மண்டப பூசை காலை 10 மணிக்கும், இரவுத்திருவிழாவுக்கான வசந்த மண்டப பூசை இரவு 7.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.
திருவிழாக்காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கபடவுள்ள நிலையில், அன்னதானம் வழங்க விரும்பும் அடியார்கள் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபட்டுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.