Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

மெல்லக் கொல்லும் 'பார்த்தீனியம்' செடிகள் - இங்கும் பெருகிவருகின்றது

பிரசுரிக்கபட்ட திகதி: 04/05/2014 (ஞாயிற்றுக்கிழமை)
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நிலாவரைப் பகுதியிலிருந்து கடந்த சில மாதங்கள் முன்பு, பார்த்தீனியச் செடிகளை அழிக்கும் நடவடிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்து வைத்திருந்தார். 
 
யாழ்பாணத்தின் பெரும்பாலான பகுதிகள் 'பார்த்தீனியம்' செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் ஏதுவான சூழலைக் கொண்டிருப்பதால், இவை மிகவும் அபாயகாமாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றன. .
 
கீழே உள்ள 'பார்த்தீனியம்' பற்றிய கட்டுரை நேற்று தமிழகத்தின் நக்கீரன் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டதாகும். எதுவித மாற்றமுமின்றி மீள் பிரசுரிக்கின்றோம். .
 
(ஆனாலும் படங்கள் எம்மால் உடுப்பிட்டி - தொண்டைமானாறு வீதியில் எடுக்கப்பட்டவையாகும்).
 
மெல்லக் கொல்லும் 'பார்த்தீனியம்' செடிகள்
 
இப்போது தமிழகமெங்கும் உள்ள விவசாயிகளின் தீராத பிரச்சனைகளுள் ஒன்றாக உருவாகி விட்டது “பார்த்தீனியம்” என்ற நச்சு செடி. தோட்டம், வயல், தென்னத்தோப்பு, சாலையோரங்கள், கழிவுநீர் போகுமிடம் என பார்க்குமிடமெல்லாம் இந்த பார்த்தீனியம் செடிகள் செழித்து வளர்ந்து வருகிறது.
 
கால்நடைகள், பறவைகள், பூச்சி புழுக்கள், மனிதர்கள் என இந்த உலகத்தில் யாருக்கும் பயனில்லாமல் இருக்கும் இந்த செடியின் வரலாறு பற்றியும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் நாம் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரிடம் தகவலறியும் உரிமைச் சட்டம்-2005,ன் கீழ் கேட்டிருந்தோம். இதற்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டிருந்த பதிலை அப்படியே வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
 
பார்த்தீனியம் என்றால் என்ன ?
 
(தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில், வல்லை வெளிக்கு அண்மையில் காணப்படும் பார்த்தீனியம் செடிகள்)

பார்த்தீனியம் என்பது தேசிய அளவில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு “களை”ச்செடியாகும். இக் ”களை”ச்செடி யானது ஓராண்டு வரை வளரக்கூடிய சிறு செடி. இது, “ஆஸ்ட்ரோஸியே”  தாவரக்குடும் பத்தை சேர்ந்தது. பார்தீனியத்தை நட்சத்திரக்“களை’, கேரட்“களை”, வெள்ளைத்தொப்பி, மேல்வெள்ளை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இக் “களை”ச்செடி இயற்கையாகவே, மெக்சிக்கோ, தென் மற்றும் வட அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளில் பல நூற்றாண்டு களாக காணப் படுகின்றன.

 
பார்த்தீனியம் “களை”ச்செடி, நமது நாட்டில் 1956-ல், கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட போது, மகராஷ்டிரா மாநிலத்தில் ஊடுருவியதாக தெரிகிறது. 1997-ம் ஆண்டுவரை இக் “களை”செடி உலகத்தில் கட்டுப்படுத்த முடியாத ஒரு “களை”யாக இருக்கவில்லை. அதன் பிறகு, வெகு வேகமாக வளரத்தொடங்கிய பார்த்தீனியம் உலகிலுள்ள ஏழு முக்கிய “களை” செடிவகைகளுள் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 35, மில்லியன் ஏக்கர் நிலங்களில் இந்த “களை”செடி ஊடுருவியுள்ளது.
 
சாலை ஓரம், இரயில்வே பாதைகளின் ஓரங்கள், தரிசு நிலங்கள், தொழிற்ச்சாலை, குப்பை மேடுகள், சாக்கடை ஓரங்கள், நீர் கால்வாய் ஓரங்களில் ஊடுருவிய இக்களை செடிகள், தற்போது விவசாய நிலங்கள், தோட்டங்கள் மற்றும் காடுகளிலும் வேகமாக உடுருவி வருகிறது.
 
“பார்த்தீனியம்” வேகமான வளர்ச்சிக்கான காரணங்கள்:-
*இயற்கை எதிரிகள் இல்லாத காரணத்தால் இனப்பெருக்கும் அதிகரித்தது.
 
*அதிக விதைகளை உற்பத்தி செய்தல்.
 
*விரைவாக பரவக்கூடியது.
 
*இக்”களை” உற்பத்தி செய்யக்கூடும் நச்சுத்தன்மையால் ஏற்ப்படக்கூடிய பாதிப்பு.
 
கால் நடைகள் கூட உண்ணாத நச்சு செடியாக உள்ளது.
 
*எல்லா நிலங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா பருவத்திலும் வளரக்கூடியது.
 
பார்த்தீனியத்தின் பண்புகள்;-
 
பார்த்தீனியனம் செடிகள் அதிவேகத்தில் வளர்ந்து முதிர்ச்சியை எட்டக்கூடியது. இக்”களை” செடியானது 1.5 முதல்  2.0 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. முட்டை வடிவமான இலையைக்கொண்டது. இலையின் மேல் பகுதியில் வெள்ளை நிற ரோமங்களை கொண்டுள்ளது. செடியின் முதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுப்பகுதியில் ரோமங்கள் தெளிவாக தெரியும்.
 
இந்த “களை”செடியானது அதிக ஆழம் செல்லும் ஆணிவேர் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த “களை” செடியின் இலைகள் பச்சை மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும், அதன் “பூ”க்கள் வெள்ளை நிறத்தில் கொத்து கொத்தாக காணப்படும். இந்த “களை”செடியின் விதைகள் தட்டையாகவும், இரண்டு மி.மி நீளம் கொண்ட “வைர”வடிவம் கொண்டது. சாதரணமாக ஒரு செடியானது ஒரு பருவத்தில் 50,000 விதைகளை உருவக்கக்கூடிய வல்லமை படைத்தது.
 
பார்த்தீனியம் செடியின் ஒவ்வொரு பூங்கொத்திலும் நான்கு விதைகள் காணப்படும். இந்த விதைகள் நான்கே வாரங்ககளுக்குள் பூவிலிருந்து கீழே விழுந்து மீண்டும் முளைத்து வளரும் தன்மை உடையது. ஒரு முறை பார்த்தீனியம் செடி முளைத்து விட்டால் அந்த இடத்தில் எந்த சூழ்நிலையிலும் இந்த “களை”செடி அழியாது. வறட்சி, மழை என எப்படிப்பட்ட பருவ மாற்றத்தையும் தாங்கி இந்த “களை”செடிகள் அந்த இடத்தில் வளரக்கூடியது.
 
 
பார்த்தீனியம் ஒரு அபாயகரமான செடி..?
 
(தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில், வல்லை வெளிக்கு அண்மையில் காணப்படும் பார்த்தீனியம் செடிகள்)
 
பொதுவாக பார்த்தீனியம் ஒரு விஷச்செடி. மனிதனுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாதகமான செடி. பிரச்சனைக்குரிய இக் “களை”யானது மனிதனுக்கு ஒவ்வாமை ஏற்படுதக்கூடிய விஷமுள்ள “களை”செடியாக பரவி வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் ஆஸ்துமா, காசநோய், தொழுநோய் மற்றும் சுவாசம் சம்மந்தமான பல நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது.
 
நாம் குடியிருக்கும் வீடுகளின் பக்கங்களிலும், தோட்டங்களிலும், கால்நடை மேச்சல் நிலங்களிலும் அதிகமாக வளர்ந்து வருவதால், மனிதனுக்கு தோல்,ஆஸ்துமா சம்மந்தமான பல வியாதிகளை உருவாக்கிவருகிறது.
 
ஒரு பார்தீனியத்தினியம் செடி 624-மில்லியன் மகரந்த துகள்களை உற்பத்தி செய்து காற்றின் மூலமாக பரவச்செய்யக்கூடியது. இதனால், ஆண்டு முழுவதும் இந்த நச்சு செடியின் மகரந்த துகள்கள் கற்று மண்டலத்தில் பரவிக்கொண்டிருக்கும். இதனால், பலவிதமான நோய்  மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும், ஜுலை, ஆகஸ்ட்டு மாதங்களில் இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
 
கால்நடைகள் பார்தீனியம் செடியை உண்பதில்லை என்றாலும், பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள நிலங்களின் வழியாக செல்லும் போது அவற்றின் உடலில் பார்த்தீனியம் செடிகள் மோதுவதன் மூலமும், அந்த செடிகள் வளர்ந்துள்ள இடங்களில் கிடைக்கும் காற்றை சுவாசிக்கும் போதும் கால்நடைகளுக்கு அரிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது.
 
குறிப்பாக, பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள பகுதியில் மேய்ந்துவிட்டு செல்லும் ஒரு எருமை அல்லது மாடு தன்னுடைய கன்றுக்கு பால் கொடுக்கும் போது, பார்த்தீனியம் செடியின் கடுமையான நச்சுத்தன்மை கன்றுகளுக்கு போய் சேருகிறது. இதனால், கன்றுகள் மற்றும் தாய் இரண்டுக்கும் ஈரல், சிறுநீரக பகுதிகளில் ஏற்ப்படும் பாதிப்புகளால் கால்நடைகளின் மறு உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது. பார்த்தீனியம் செடிகள் வளர்ந்துள்ள இடங்களில் சென்று மேயும் கால்நடைகள் மூலம் பெறப்படும் பால் மனிதர்களுக்கு பலவகையிலும் தீமை விளைவிக்ககூடியது.
 
(தொண்டைமானாறு - உடுப்பிட்டி வீதியில், நெசவு ஆலைக்கு முன்னால் காணப்படும் பார்த்தீனியம் செடிகள்)
 
பார்தீனியத்தை “களை” மேலாண்மை மூலம் கட்டுப்பத்துவது மிகவும் அவசியமாகிறது. இதனை கூட்டு முயற்சியாக அரசாங்கம்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய கூட்டமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர் இனைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே பார்த்தீனியம் களைச்செடிகளின் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வகைகளில் பார்தீனியத்தின் வளர்சியை கட்டுப்படுத்தலாம்:-
 
*பொது இடங்கள் அல்லது பயிரிடப்படாத இடங்களில் இருக்கும் தாவரங்களையும் இயற்கை சூழலையும் வளர்க்கவேண்டும்.
 
**துத்தி, ஆவாரம் செடி போன்ற சில செடிகள் பார்தீனியம் செடியை வளர விடாமல் செய்கிறது. எனவே வீதிகளில் இது போன்ற செடிகளை நட்டு வளர்க்கலாம்.
 
***மெக்சிகன் வண்டுகள் பார்த்தீனியம் செடியை மட்டுமே உண்டு வாழக்கூடியது. எனவே இந்த வகை வண்டுகளை அதிக அளவில் உற்பத்தி செய்து விடவேண்டும்.
 
****நிலங்களில் உள்ள பார்தீனியம் “களை”செடிகளை ஆட்கள் கையுறை அணிந்துகொண்டு “களை” செடிகள் பூப்பதற்கு முன்பாக அவற்றை வேரோடு பிடுங்கி எரிவதன் மூலமும் ஓரளவு கட்டுப் படுத்தலாம், வேரோடு பிடுங்கி அகற்றும் போது, மனிதர்களுக்கு தோல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
வேதிபொருட்களை கொண்டு பார்த்தீனியம் செடிகளை அகற்றும் முறை.
 
1) ஒரு ஹெக்டேருக்கு 2.5 -கிலோ அட்ரசின் மருந்தை கலந்து பார்த்தீனியம் விதை முளைப்பதற்கு முன்பாக நிலத்தில் அடிக்கவேண்டும்.
 
2) உப்பு 200-கிராம்+2-மி. டிப்பால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற அளவில் கலந்து பார்த்தீனியம் களை செடி பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
 
3) பத்து கிராம் 2-4-டி சோடியம் உப்பு+20கிராம் அம்மோனியம் சல்பேட்+2மி.லி சோப்பு கரைசல் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பார்த்தீனியம் களை செடிகள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
 
4) 15கிராம் கிளைப்பொசெட்+ 20-கிராம் அம்மோனியம் சல்பேட்+2 மில்லி சோப்பு கரைசல் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
 
5) 4 கிராம் மெட்ரிபூசின்+2 மில்லி சோப்பு கரைசல் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் பூப்பூக்கும் தருணத்திற்கு முன்பாக அடிக்கவேண்டும்.
 
இதன் மூலம் பார்த்தீனியத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம் என்று கோவை வேளாண்மை பல்கலைகழகத்தின் சார்பில் சொல்லபடுகிறது. 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 

எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
மரண அறிவித்தல் - திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2025 (செவ்வாய்க்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - குமாரதாஸ் சண்முகராசா
பிரசுரிக்கபட்ட திகதி: 25/02/2025 (செவ்வாய்க்கிழமை)
இறுதிக்கிரியை பற்றிய விபரம் - இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2025 (திங்கட்கிழமை)
கடற்கரையில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/02/2025 (திங்கட்கிழமை)
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி - நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - மாணிக்கவாசகம் பூரணலெட்சுமி
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
BBC தமிழ் சேவையின் முன்னாள் ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் இயற்கை எய்தினார்.
பிரசுரிக்கபட்ட திகதி: 23/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் இன்று மீள் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 22/02/2025 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல் - இரத்தினசாமி கணேசசுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2025 (வியாழக்கிழமை)
பட்டப்படிப்புக்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல் 2025 -
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2025 (புதன்கிழமை)
வல்வை அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை பரிசளிப்புவிழா
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2025 (புதன்கிழமை)
சிவகுரு வித்தியாசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி 2025- அழைப்பிதழ்
பிரசுரிக்கபட்ட திகதி: 19/02/2025 (புதன்கிழமை)
வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா கோடைக்கால ஒன்று கூடல்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2025 (திங்கட்கிழமை)
விழிநீர் சுமந்து,நன்றியுடன் வழியனுப்புகின்றோம் சென்றுவா ஆசானே.
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
முன்னாள் சிதம்பரக் கல்லூரி உப அதிபர் குழந்தைவேல் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
ஹாட்லி கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப்போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/02/2025 (ஞாயிற்றுக்கிழமை)
வல்வை சிவன் ஆலய நித்திய பூசை நேரங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 15/02/2025 (சனிக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் சக்திவேல் மதியழகன்
பிரசுரிக்கபட்ட திகதி: 14/02/2025 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - சந்திரவதனா ஞானச்சந்திரன்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
ஆசிரிய ஆளுமையொன்றின் நீங்காத நினைவலைகள்.
பிரசுரிக்கபட்ட திகதி: 13/02/2025 (வியாழக்கிழமை)
அந்தியேட்டி அழைப்பிதழ் - அமரர் இரத்தினவடிவேல் வள்ளியம்மாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/02/2025 (புதன்கிழமை)
சந்நிதி கோவிலில் நடைபெற்ற தைப்பூசத் திருநாள்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/02/2025 (செவ்வாய்க்கிழமை)
வல்வெட்டித்துறை ஶ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர தேவஸ்தானத்தில் இடம்பெற்ற கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/02/2025 (திங்கட்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<Feb - 2025>>>
SunMonTueWedThuFriSat
      
1
2
3
45678
9
10
11
12
13
1415
16
171819202122
2324
25
26
2728 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai