காண்டாவனம் எனக் கூறப்படும் அக்கினி நாள் (அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில்) இன்று (04.05.2014) ஆரம்பமாகின்றது. கோடை காலமான சித்திரை, வைகாசி (அதாவது ஏப்ரல், மே) மாதங்களில் பூமிக்கு அருகில் சூரியன் வருவதால் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன், இக்காலப் பகுதியில் இலங்கையின் வடபகுதியில் சூரிய உஷ்ணம் அதிகமாக இருப்பதுடன், வளிமண்டல வெப்பநிலையும் வருடத்தின் உச்ச அளவைத் இந்தப் பிரதேசங்களில் தொடுகின்றது.
பொதுவாக சித்திரை மாத இறுதியில் தோன்றி வைகாசி முதல் பகுதியில் முடிவடையும் இந்த அக்கினி நாள் 21 நாட்கள் என இங்கு கணிக்கப்படுவது வழமை.
ஆனாலும் இன்று ஆரம்பமாகும் அக்கினி நாள் எதிர்வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அக்னிநட்சத்திரம் முடிந்த ஒரு சில தினங்களில் தென்மேற்கு பருவக் காலநிலை (South West Monsoon) ஆரம்பமாகும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.
இது இவ்விதமிருக்க இலங்கையின் தலைநகர் கொழும்பில் வானம் மேகமூட்டத்துடன் இருப்பதுடன், இலேசான மழையும் (காலையில்) பெய்துவருகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.