வல்வை நகரசபை நம்பிக்கையில்லா பிரேரணை, 3 உறுப்பினர்கள் தொடர்ந்தும் நகரசபை வளாகத்தில் தங்கியுள்ளனர்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2014 (திங்கட்கிழமை)
இன்று வல்வை நகரசபையில், வல்வை நகரசபைத் தலைவருக்கு எதிராக கொண்டுவந்த பிரேரணையை, நகரசபைத் தலைவர் வாக்கெடுப்பிற்கு விடவில்லை எனக்கூறி, வல்வை நகரசபையின் இதர உறுப்பினர்கள் மூவர் தொடர்ந்து நகரசபை வளாகத்தினுள்ளேயே தொடர்ந்து அமர்ந்து உள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை 9 மணியளவில் வல்வை நகரசபை அமர்வின் போது, வல்வை நகரசபைத் தலைவர் திரு.நடராசா அனந்தராஜ் அவர்களிற்கு எதிராக, நகரசபை உறுப்பினர்களான வல்வை நகரசபைத் பிரதித் தலைவர் கந்தசாமி சதீஷ், கனகராஜா ஜெயராஜ், சூசைப்பிள்ளை சேவியர் குலநாயகம், கோணலிங்கம் கருணானந்தராசா, சக்திவேல் பிரதீபன் ஆகிய ஐவர், அவர்களாகத் தெரிவிக்கும் வல்வை நகரசபைத் தலைவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், மற்றும் நிர்வாக முறைகேடுகளை முன்வைத்து, நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தனர்.
ஆனால் நகரசபைத் தலைவர், வாக்கெடுப்பு நடத்தாமல், நகரசபையைவிட்டு சுமார் 10 மணியளவில் நகரசபை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும், இதை எதிர்த்து வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தாம், அதாவது கந்தசாமி சதீஷ், கனகராஜா ஜெயராஜ், கோணலிங்கம் கருணானந்தராசா ஆகிய மூவரும், நகரசபையைவிட்டு வெளியேறப்போவதில்லை எனத்தெரிவித்து தொடர்ந்தும், நகரசபை மகாநாட்டு மண்டபத்தில் தொடர்ந்தும் (05.05.14 மாலை 5 மணி) தங்கியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.