வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு வணிகக் கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் நியமனம்
பிரசுரிக்கபட்ட திகதி: 03/01/2013 (வியாழக்கிழமை)
வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் வல்வை மகளிர் மகா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் திரு.த.ரமேஸ்வரன் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இவர் க.பொ.த.(சா.த) , க.பொ.த.(உ.த) வகுப்புகளிற்கு வணிகக் கல்வி, மற்றும் க.பொ.த.(சா.த) வகுப்புகளிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (Information and Communication Technology) ஆகிய பாடங்களை கற்பிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றவர். கடந்த சில மாதங்களாக வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தில் ICT பாடத்திற்கு ஆசிரியர் இல்லாமலிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே இவ்வருடம் தரம் 10,11 இல் கல்வி கற்கும் மாணவர்கள் தமது விருப்பத்திற்குரிய ஒரு பாடமாக ICT பாடத்தை தயக்கமின்றி கற்று பயனடையலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.