வல்வெட்டித்துறை மாணவர்களுக்கான இலவசக் கணிதப் பட்டறைக்கான ஆரம்பக் கூட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/01/2013 (வெள்ளிக்கிழமை)
வேம்படி உடையாமணலில் இயங்கி வரும் கல்விக்கூடத்தில் இலவச கணித வகுப்புப் பயிற்சிப் பட்டறைக்கான (Maths Workshop) ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29-01-2013) மாலை 5;00 மணிக்கு நடைபெறவுள்ளது. இங்கு வாரநாட்களில் விசேட ஆங்கிலப் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்றுவருகின்றன.
மேலதிக விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறைமாணவர்களுக்கானஇலவசக்கணிதப்பட்டறை
வேம்படி- உடையாமணல் வீதியில் அமைந்துள்ள கல்வி மையத்தில் 6, 7, 8, 9, 10, 11 ம் ஆணடு மாணவர்களுக்கான கணிதப் பட்டறைகள் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9;00 மணி தொடக்கம் பி.ப. 1;00 மணி வரை நடைபெறவுள்ளன.
மேற்படி கல்வி மையத்தில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு மாணவர்கள் சுயமாகக் கல்வி கற்று வருகின்றனர். ( சிறப்பாகக் கல்வி கற்பதற்குச் சுயகற்றல் என்பது மிக முக்கியமானதாகக் கல்விமான்களால் கருதப்படுகிறது என்பதைப் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும்).
அத்துடன் வாரநாட்களில் விசேட ஆங்கிலப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
கணிதப் பட்டறைக்கான ஆரம்பக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29-01-2013) மாலை 5;00 மணிக்கு மேற்படி கல்வி மையத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பங்குபெற்றுமாறு ஆர்வமுள்ள பெற்றோர்களையும் மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.