வல்வெட்டித்துறை ஊரணிப் பகுதியில் அமைந்துள்ள, பழைய ஊறணி ஊற்றினைப் புனரமைக்கும் பணியை தமது அடுத்த முயற்சியாக மேற்கொள்ளவுள்ளதாக "PM foundation" தெரிவித்துள்ளது.
மேலும் இந்த செயல்திட்டம் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அனுமதியுடன் தான் நடைபெறவுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் அரை நூறு வருடங்களின் முன்னர் சிறந்ததொரு நன்னீர் ஊற்றினைக் கொண்டிருந்த இந்த ஊற்றானது, பின்னர் படிப் படியாக மறந்து விட்டது.
கடந்த 18.11.2012 அன்று இந்த ஊறணி நீரூற்று பகுதியானது, மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டிய இடமாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பெயரிடும் இந்நிகழ்வு 18.09.2012 அன்று நண்பகல் நடைபெற்றிருந்தது.
'PM foundation' யினர் தற்பொழுது வல்வை மகளீர் மகா வித்தியாலயத்திற்கு அருகில், பருத்தித்துறை - காங்கேசன்துறை வீதியில் அமைந்திருக்கும் சிறுவர் மயானத்தின் புனரமைப்பு வேலைக்களையும் தற்பொழுது செய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கதுடன் , சாதாரண பெயருடன் இருந்த இம் மயானத்திற்கு 'வல்வை சிறுவர் துயிலும் பூங்கா' எனவும் பெயரிடப்படவுள்ளது. மேலும் இம்மயானத்தை வெளிநாடுகளில் அமைந்திருக்கும் மயானங்களைப் போன்று மாற்றியமைக்கவும் 'PM foundation' முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
'PM foundation' London ஐ தளமாகக கொண்ட செயற்படும் ஒரு தன்னார்வ அமைப்பு, புலம் பெயர்ந்து வாழும் சில வல்வையர்களை உறுப்பினராகக் கொண்டது. சில மாதங்கள் முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகள் Ithanudan sampanthappadda seithikal
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.