மாவட்ட ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது
பிரசுரிக்கபட்ட திகதி: 20/07/2013 (சனிக்கிழமை)
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான யாழ் மாவட்ட அரச அதிபர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியது. இப்போட்டியில் முதலில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி கரவெட்டி பிரதேச செயலக அணியை எதிர்த்து மோதியது. இப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணி 2 : 0 என்ற கோல் கணக்கில் கரவெட்டி பிரதேச செயலக அணியை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதில் ரசிகரன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தலா 1 கோல் போட்டனர்.
இரண்டாவது போட்டியில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து விளையாடிய பருத்தித்துறை பிரதேச செயலக அணி 2 : 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அறையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் ரஞ்சித் மற்றும் காண்டீபன் ஆகியோர் தலா 1 கோல் போட்டு அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இச்சுற்றுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியை பிரதிநிதிப்படுத்தி, வல்வை விளையாட்டுக் கழகம் ஏனைய அணிகளிலிருந்து வீரர்களை தெரிவு செய்து களம் இறங்கியிருந்தது, இதில் வல்வை விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த 6 வீரரும், பலாலி விண்மீன் வி.க வைச் சேர்ந்த 4 வீரரும், நெடியகாட்டு வி.கழகத்தைச் சேர்ந்த ஒரு வீரரும் பருத்தித்துறை பிரதேச செயலக அணியைப் பிரதிநிதிப்படுத்தியிருந்தனர்.
இச்சுற்றுப்போட்டியின் அடுத்த கட்டமாக பருத்தித்துறை பிரதேச செயலக அணி அரையிறுதிப் போட்டியில் ஊர்காவற்துறை பிரதேச செயலக அணியை எதிர்த்து எதிர்வரும் 23.07.2013 திகதியன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணியளவில் மோதவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.