வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பித்த முள்ளிவாய்கால் நோக்கிய பேரணி யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இன்று மதியம் 3 மணியளவில் சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ஆலடியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திலிருந்து இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வல்வெட்டி துறை அம்மன் கோயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு யாழ் e பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.