R.S என்று அழைக்கப்படும் திரு.R.S.சிவசுப்ரமணியம் (S.L.A.S, JP) அவர்கள் நேற்று சுமார் 23:00 மணியளவில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். இவர் கடந்த இரு மாதங்களாக சுகவீனமுற்றிருந்தார். இவருக்கு வயது 83, மணமாகதவர்.
வல்வெட்டிதுறைச் சேர்ந்த திரு.R.S அவர்கள் இலங்கை அரசின் பல உயர் பதவிகளில் பதவி வகித்தவர், அதிலும் குறிப்பாக சுகாதார அமைச்சின் செயலாளராகவும், பின்னர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளாராகவும் கடமையாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் திரு.R.S அவர்கள் முழு இலங்கைக்கும் உரிய J.P தகமையையும் பெற்றிருந்தவர் ஆவார்.
சிறந்த கல்விமான், சிறந்த தகமை, மொழியாற்றல், எல்லோருக்கும் உதவும் மனப்பாங்கு என பல தகமைகளைக் கொண்டிருந்த இவரின் உதவியால் பலர் பலவழிகளில் பயன் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் திரு R.S.அவர்கள் யாழ் வல்வை சிதம்பராக் கல்லூரியின், கொழும்பு பழைய மாணவர் சங்கக்கிளையின் தலைவராக இதுவரை இருந்து வந்துள்ளதுடன், கடந்த காலங்களில் இக்கிளையை பலப்படுத்துவதில் சிறந்த வழியில் பங்காற்றியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரின் சேவை நலனைப் பாராட்டி, கடந்த வருடம் பொது மக்கள் இவரைக் கெளரவப்படுத்தும் வகையில் வல்வெட்டித்துறையில் விழா ஒன்றை எடுத்திருந்தமை இங்கு மிகவும் சுட்டிக் காட்டக் கூடியவொன்றாகும்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கடந்த வருடம் (11.11.2012) அன்று திரு.R.S.சிவசுப்ரமணியம், திரு வேலும்மயிலும் (A.G.A) ஆகிய இருவரையும் கெளரவிக்கும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள் (Comment here in Tamil or English)
Name:
Email:
Country:
Enter the same number in the box below
Verification Code:
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.